search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தியை காட்டி பணம் பறிப்பு"

    தேனி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளியின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு வாலிபர் அவரை வழிமறித்தார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி அய்யப்பனிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அல்லிநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 29) என தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×